சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்து வருவதால், பொதுமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக அவரது உடல் நாளை காலை தீவுத் திடலுக்கு மாற்றப்படவுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள், பொதுமக்கள், பல்வேறு கட்சியினர் குவிந்து வருகின்றனர். காலையில் கூட்டம் சற்று குறைவாக இருந்த நிலையில் தற்போது பல்வேறு ஊர்களிலிருந்தும் தொண்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். சில நூறாக இருந்த தொண்டர்கள் எண்ணிக்கை தற்போது பல்லாயிரக்கணக்காக மாறியுள்ளது.
கோயம்பேடு தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில்தான் தற்போது விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வசதிக் குறைவாக இருப்பதால் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வேறு இடத்திற்கு விஜயகாந்த் உடலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விஜயகாந்த் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தற்போது விஜயகாந்த் உடல் நாளை காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு மாற்றப்படவுள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிற்பகல் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும். பூந்தமல்லி சாலை வழியாக இறுதி ஊர்வலம், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு வந்து சேரும். அங்கு மாலை 4.45 மணிக்கு உடல் நல்லடக்கம் நடைபெறும்.
முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகளை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் துப்பாக்கிக் குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}