தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை.. மியாட் மருத்துவமனை அறிக்கை

Nov 29, 2023,05:48 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 வாரங்களுக்கு முன்பு இரவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தேமுதிக கட்சி தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக ஒரு செய்தி வெளியானது. அதையும் தேமுதிக மறுத்தது. இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு சிகிச்சை நல்லபடியாக நடப்பதாகவும், அவர் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.




இந்தப் பின்னணியில் தற்போது புதிதாக ஒரு மருத்துவ நிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. விரைவில் அவர் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ப்ரீத்தி மோகன்தாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இந்த அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது விஜயகாந்த்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக உணர முடிகிறது. விஜயகாந்த் குறித்த இந்த அறிக்கை அவரது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையில் விஜயகாந்த் தொண்டர்கள் இறங்கியுள்ளனர்.


சீக்கிரமே உடல் நலம் சரியாகி.. ஜம்முன்னு வாங்க கேப்டன்!

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்