சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 வாரங்களுக்கு முன்பு இரவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தேமுதிக கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக ஒரு செய்தி வெளியானது. அதையும் தேமுதிக மறுத்தது. இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு சிகிச்சை நல்லபடியாக நடப்பதாகவும், அவர் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்தப் பின்னணியில் தற்போது புதிதாக ஒரு மருத்துவ நிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. விரைவில் அவர் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ப்ரீத்தி மோகன்தாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது விஜயகாந்த்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக உணர முடிகிறது. விஜயகாந்த் குறித்த இந்த அறிக்கை அவரது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையில் விஜயகாந்த் தொண்டர்கள் இறங்கியுள்ளனர்.
சீக்கிரமே உடல் நலம் சரியாகி.. ஜம்முன்னு வாங்க கேப்டன்!
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}