சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீர்கள், தவறான தகவல்களை நம்பாதீர்கள் என்று அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தேமுதிக தலைமை மறுத்தது. வழக்கமான உடல் நல பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அது தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்து வரும் சூழ்நிலையில் அவர் குறித்த புதிய தகவல் ஒன்று காட்டுத் தீ போல் பரவியது. விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்களில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதை தற்போது தேமுதிக மறுத்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியீட்டுள்ள ஒரு அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.
செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. இது போன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம் யாரும், பரப்பவும் வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர் விரைவில் குணம் பெற தேமுதிகவினர் வேண்டுதல்களில் ஈடுபட்டுள்ளனர். சீக்கிரம் நலம் பெற்று பழைய சிங்கமாக வாங்க கேப்டன்.. தமிழ்நாடு உங்களை ரொம்ப மிஸ் பண்ணுது.. மீண்டும் வாங்க!
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}