விஜயகாந்த் குறித்து வதந்தி பரப்பாதீர்கள்.. வதந்திகளையும் நம்பாதீர்கள்.. தேமுதிக அறிக்கை

Nov 20, 2023,01:39 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீர்கள், தவறான தகவல்களை நம்பாதீர்கள் என்று அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தேமுதிக தலைமை மறுத்தது. வழக்கமான உடல் நல பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அது தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்து வரும் சூழ்நிலையில் அவர் குறித்த புதிய தகவல் ஒன்று காட்டுத் தீ போல் பரவியது. விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்களில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதை தற்போது தேமுதிக மறுத்துள்ளது.




இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியீட்டுள்ள ஒரு அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.


செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. இது போன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம் யாரும், பரப்பவும் வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.




விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர் விரைவில் குணம் பெற தேமுதிகவினர் வேண்டுதல்களில் ஈடுபட்டுள்ளனர். சீக்கிரம் நலம் பெற்று பழைய சிங்கமாக வாங்க கேப்டன்.. தமிழ்நாடு உங்களை ரொம்ப மிஸ் பண்ணுது.. மீண்டும் வாங்க!

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்