பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை.. சபாஷ் நடவடிக்கை!

Oct 27, 2024,07:17 PM IST

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை போல, பெசன்ட் நகர் கடற்கரையிலும் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


சென்னை மெரீனா கடற்கரை, உலகிலேயே மிகவும் நீளமான 2வது பெரிய கடற்கரை. இந்த கடற்கரையில் நடந்து சென்று கடலில் கால் நனைப்பது பலருக்கும் பிடித்த விஷயம். ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு இது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இந்தக் கனவை கடந்த அதிமுக ஆட்சியில் நனவாக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தை தற்போதைய திமுக அரசு நனவாக்கி மாற்றுத் திறனாளிகளின் மனதில் பால் வார்த்தது.




தற்போது இந்தத் திட்டத்தை பெசன்ட் நகர் கடற்கரைக்கும் விரிவுபடுத்துகிறது திமுக அரசு. இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்று பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை 2 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது.  அந்த மரப்பாதை வழியாக  ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மெரினாவில் தினசரி கடற்கரை வரை சென்று கடல் அலையில் கால் நனைத்து மகிழ்கின்றனர்.


இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையின் அடிப்படையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை அமைக்க நம் முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்கள்.


அதன்பேரில், ரூ.1.61 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்ற பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். பெசன்ட் நகர் கடற்கரையில் மரப்பாதை அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.




மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், திருவான்மியூர் மற்றும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை அமைக்க, நம் அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


பாராட்டுக்குரிய நடவடிக்கை.. மாற்றுத்திறனாளிகள் மனம் மகிழ, தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் அதிகம் வரும் கடற்கரைகளில் இதைப் போன்ற மரப் பாதையை அமைத்தால் மாற்றுத் திறனாளிகள் நிச்சயம் மகிழ்வார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்