பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை.. சபாஷ் நடவடிக்கை!

Oct 27, 2024,07:17 PM IST

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை போல, பெசன்ட் நகர் கடற்கரையிலும் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


சென்னை மெரீனா கடற்கரை, உலகிலேயே மிகவும் நீளமான 2வது பெரிய கடற்கரை. இந்த கடற்கரையில் நடந்து சென்று கடலில் கால் நனைப்பது பலருக்கும் பிடித்த விஷயம். ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு இது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இந்தக் கனவை கடந்த அதிமுக ஆட்சியில் நனவாக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தை தற்போதைய திமுக அரசு நனவாக்கி மாற்றுத் திறனாளிகளின் மனதில் பால் வார்த்தது.




தற்போது இந்தத் திட்டத்தை பெசன்ட் நகர் கடற்கரைக்கும் விரிவுபடுத்துகிறது திமுக அரசு. இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்று பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை 2 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது.  அந்த மரப்பாதை வழியாக  ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மெரினாவில் தினசரி கடற்கரை வரை சென்று கடல் அலையில் கால் நனைத்து மகிழ்கின்றனர்.


இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையின் அடிப்படையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை அமைக்க நம் முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்கள்.


அதன்பேரில், ரூ.1.61 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்ற பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். பெசன்ட் நகர் கடற்கரையில் மரப்பாதை அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.




மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், திருவான்மியூர் மற்றும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை அமைக்க, நம் அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


பாராட்டுக்குரிய நடவடிக்கை.. மாற்றுத்திறனாளிகள் மனம் மகிழ, தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் அதிகம் வரும் கடற்கரைகளில் இதைப் போன்ற மரப் பாதையை அமைத்தால் மாற்றுத் திறனாளிகள் நிச்சயம் மகிழ்வார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்