சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயற் திட்ட குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக கட்சி கழகத்தின் முதல் மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் விஜயின் பேச்சு மற்றும் கட்சிக் கொள்கை குறித்து தற்போது வரை பல்வேறு அதிர்வலைகள் எழுந்து வருகின்றன.
மறுபக்கம் விஜய் கடுமையாக எதிர்க்கும் திமுக, தனது தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்து விட்டது. திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக குழுவையும் திமுக அதிரடியாக அமைத்து வேலைகளைத் தொடங்கி விட்டது.
இப்படி சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை வருட ஆண்டு காலம் இருந்தும் கூட தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயற்குழு திட்ட குழு கூட்டம் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது. கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்ப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவைப் பொறுத்தவரை உயர்ந்த பட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு இந்தக் குழு. இக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதுதான் பின்னர் அமல்படுத்தப்படும். அந்த வகையில் இந்தக் கூட்டம் கூடுவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தொடர்பாகவும், இன்ன பிற முக்கிய முடிவுகள் தொடர்பாகவும் இதில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}