சென்னை: திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சுதந்திர தினத்தையொட்டி தங்களது டிவிட்டர் டிபியை வித்தியாசமான முறையில் மாற்றியுள்ளனர்.
"INDIA" என்ற பெயர் பிரதானமாக இருக்கும்படி டிபியை வடிவமைத்துள்ளனர். மூவண்ணக் கொடியின் பின்னணயில் மேலே கொட்டை எழுத்துக்களில் இந்தியா என்றும் கீழே United we stand என்ற வார்த்தையையும் வடிவமைத்துள்ளனர்.
நாளை நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று பலரும் டிபியை தேசியக் கொடியின் வண்ணத்திற்கு மாற்றி வருகின்றனர். அந்த வகையில் திமுகவினரும் மாற்றி வருகின்றனர். ஆனால் திமுகவினர் மாற்றி வரும் டிபியில் ஒரு உத்தியைக் கடைப்பிடித்துள்ளனர். அதுதான் தங்களது தேசிய அளவிலான கூட்டணியின் பெயரை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் "INDIA" என்பதை பெரிதாக வைத்துள்ளனர்.
பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தங்களது கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டு நாட்டையே பரபரப்பாக்கினர் என்பது நினைவிருக்கலாம். அது முதல் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் இந்தியா என்ற பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் தங்களது கூட்டணியை மக்கள் நினைவில் கொள்ளும்படியாக அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சுதந்திர தினத்தையொட்டி டிபியை மாற்றியுள்ள போதும் கூட அதே உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர். சுதந்திர தினத்தைக் கொண்டாடியது போலவும் ஆச்சு, இந்தியா என்ற பெயரை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது போலும் ஆச்சு என்று ஒரே கொண்டாட்டத்தில் இரட்டிப்பு சந்தோஷத்தை அவர்கள் அடைந்துள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}