மொத்த கண்களும் சென்னை மீது.. இன்று திமுக மகளிர் உரிமை மாநாடு!

Oct 14, 2023,10:42 AM IST

சென்னை: நாட்டின் மொத்த கண்களும் சென்னை பக்கம் திரும்பியுள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


காரணம் இல்லாமல் இல்லை, தூத்துக்குடி எம்.பியும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னையில் நடைபெறுகிறது.




நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. ஆனால் இது உடனடியாக அமலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வருகின்றன.


தொகுதி மறுவரையறை முடிந்த பின்னர்தான் மகளிருக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தேர்தல்  நடத்தப்படும் என்பதால் வருகிற தேர்தலில் மகளிரின் வாக்குகளைக் கைப்பற்ற பாஜக அரசு போட்ட நாடகம் இது என்று  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இந்த நிலையில் தான் சென்னையில் திமுக நடத்தும் மகளிர் உரிமை மாநாடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இதில் முக்கியமாக பங்கேற்கிறார். உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்ரியா சுலே, காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மகபூபா முப்தி, சமாஜ்வாடிக் கட்சியின்  தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்பியுமான டிம்பிள்யாதவ் உள்ளிட்ட பெண் தலைவர்கள்  இதில் கலந்து கொள்கின்றனர்.




இன்று மாலை 4. 30 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மகளிர் உரிமைகள் காக்க, ஜனநாயகம் காக்க, நம் இந்தியாவை மீட்டெடுக்க வாருங்கள் என்று  திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் முக்கிய மாநாடுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.


இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி இன்று காலை பிரியங்கா காந்தியுடன் சென்னை வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தி சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்