சென்னை: மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார் .
கடந்த 29ஆம் தேதி வங்க கடலில் பெஞ்சல் புயல் உருவானது. இந்தப் புயலின் காரணமாக பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக கன மழை பெய்த பகுதிகளில் கடுமையான பொருட் சேதங்களும் ஏற்பட்டது. இந்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீரை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் மழைநீர் தேங்கி இடங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 2000 கோடி இடைக்கால நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் இன்று சென்னை வரும் மத்திய குழு நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியதை அடுத்து திமுக எம்பிகளும் வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் வெள்ள நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}