சென்னை: மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார் .
கடந்த 29ஆம் தேதி வங்க கடலில் பெஞ்சல் புயல் உருவானது. இந்தப் புயலின் காரணமாக பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக கன மழை பெய்த பகுதிகளில் கடுமையான பொருட் சேதங்களும் ஏற்பட்டது. இந்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீரை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் மழைநீர் தேங்கி இடங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 2000 கோடி இடைக்கால நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் இன்று சென்னை வரும் மத்திய குழு நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியதை அடுத்து திமுக எம்பிகளும் வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் வெள்ள நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை மற்றும் புறநகர்களை நனைத்த காலை மழை.. வார இறுதியில் மேலும் அதிகரிக்குமாம்!
ராம் சரண் புது முடிவு... டெல்லியில் இப்போது ஷூட்டிங் வேண்டாம்.. ராஷ்மிகா படமும் ஒத்திவைப்பு
ஆம்னி உரிமையாளர்களுடன் உடனடியாக பேச்சு நடத்துக : எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை!
ஓமவள்ளி தெரியுமா இந்த ஓமவள்ளி.. அதாங்க கற்பூரவள்ளி.. குட்டீஸ் முதல் பெரியவர் வரை.. சூப்பர் மருந்து!
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
பாகிஸ்தானை விட்டு வரக் கூடாது.. இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாரியம் அதிரடி உத்தரவு
இந்தியா முழுக்க.. 8 இடங்களில் குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த சதிகாரர்கள்.. பரபர தகவல்
டெல்லி சம்பவம்...வெடி பொருள் நிரம்பிய 2வது கார் எங்கே? தீவிரமாகும் தேடுதல் வேட்டை
டில்லி தாக்குதல் பின்னணியில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்
{{comments.comment}}