சென்னை: மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார் .
கடந்த 29ஆம் தேதி வங்க கடலில் பெஞ்சல் புயல் உருவானது. இந்தப் புயலின் காரணமாக பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக கன மழை பெய்த பகுதிகளில் கடுமையான பொருட் சேதங்களும் ஏற்பட்டது. இந்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீரை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் மழைநீர் தேங்கி இடங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய முதல்வர் மு க ஸ்டாலின் ரூ. 2000 கோடி இடைக்கால நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் இன்று சென்னை வரும் மத்திய குழு நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியதை அடுத்து திமுக எம்பிகளும் வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் வெள்ள நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}