அயோத்தி ராமர் கோவிலுக்கு வர வேண்டாம்.. கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி

Dec 17, 2023,03:31 PM IST

அயோத்தி : ஜனவரி 22 ம் தேதி வரை பொது மக்கள், பக்தர்கள் என யாரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வர வேண்டாம். குறிப்பாக பிரன பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உத்திர பிரதேசத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் மிக பிரம்மாண்டமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா ஜனவரி 22 ம் தேதி நடைபெற உள்ளது. இதை காண்பதற்காக மிக அதிக அளவிலான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 22 ம் தேதி ராமரின் புதிய சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வைபவம் ஜனவரி 22 ம் தேதி பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது. 


கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு, கோவிலும் ஜனவரி 22 ம் தேதி திறக்கப்பட்டாலும் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என ராமர் கோவில் டிரஸ்ட் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்த கனவு நிஜமாக உள்ளதால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வருவார்கள். இதனால் சுற்றுலா பயணிகளால் அயோத்தி நகரமே நிரம்பி வழியும். 




அனைத்து பொருட்களின் விலையும் , தங்கும் இடங்களின் கட்டணமும் இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்தே காணப்படும். இதனால் மக்கள் அனைவரும் அயோத்தியை சுற்றி உள்ள கோவிலுக்கு மட்டும் செல்லும் படியும், ஜனவரி 22 வரை மக்கள் யாரும் அயோத்தி நகருக்கு வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் வருவார்கள். இது தவிர 4000 புரோகிதர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 4.40 ஏக்கரில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவருக்கும் உணவு, தங்குமிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள், பாதுகாவலர்கள், கடைகள் வைப்போர் என பலரும் கூடுவதால் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மற்றவர்கள் யாரும் ஜனவரி 22 ம் தேதி வரை அயோத்தி நகருக்கு வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்