வெயில் அதிகமாக இருப்பதால், தூங்கும் போது ஏசி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், ஏசியை இரவு முழுவதும் போடுவது நல்லதா? என்றால் இல்லை, அது உடம்புக்கு கெடுதல் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
இந்தியாவை போன்ற வெப்ப நாடுகளில் ஏசி நிறைய உபயோகிக்கிறோம். அது வெப்பத்திலிருந்து காக்கிறது. தூசியை நீக்குகிறது. நல்ல தூக்கத்தையும் தருகிறது. ஆனால், இது உடம்புக்கு சில கெடுதல்களை உண்டாக்கும். முக்கியமாக, ஈரப்பதம் குறைவதால், உடல் வெப்பநிலை மாறுவதால் பிரச்சனைகள் வரலாம்.
தோல் வறண்டு போதல், கண்கள் வறண்டு போதல், தொண்டை வறண்டு போதல், ஆஸ்துமா, அலர்ஜி, சோர்வு, நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்சனைகள் வரலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
ஏசியை இரவு முழுவதும் ஏன் போடக்கூடாது?

ஏசியை நீண்ட நேரம் போடுவதால் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கெடுதல் உண்டாகும். சரியான காற்றோட்டம் இல்லாமல் போவதால் பிரச்சனைகள் வரலாம். ஏசி போட்ட அறையில் கதவு, ஜன்னல் எல்லாம் மூடி இருக்கும். இதனால், காற்று வெளியே போகாமல் ஒரே இடத்தில் இருக்கும். இதனால், தூசு, கிருமிகள் அறையிலேயே இருக்கும்.
சரியான காற்றோட்டம் இருந்தால் தான் தூசு, கிருமிகள் வெளியே போகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏசி போட்ட அறையில் தூங்கினால், காற்று சுத்தமாக இருக்காது. அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வரலாம். ஈரப்பதம் காற்றில் இருப்பதால், பூஞ்சை காளான் வளர வாய்ப்பு உள்ளது. இதனால், சுவாச பிரச்சனைகள் வரலாம். கெட்ட வாடையும் வரலாம்.
ஏசி காற்றினால் காது வலி வரலாம். வெப்பநிலை மாறுவதால், காதுக்கும், தொண்டைக்கும் நடுவில் இருக்கும் யூஸ்டேஷியன் குழாய்
சுருங்கிவிடும் அல்லது அடைத்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால், காதில் அழுத்தம் அதிகமாகி, காது தொற்று வரலாம்.
ஏசியில் தூங்கினால் உடல் வெப்பநிலை மாறும். உடல் குளிர்ச்சியாகி, உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டை இழக்கும். நல்ல தூக்கம் வர வேண்டுமென்றால், சரியான வெப்பநிலை இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால், திரும்பத் திரும்ப ஏசியில் தூங்கினால், உடல் வெப்பநிலை குறைந்துவிடும். இதனால், உடல் நடுங்கலாம். வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏசியில் தூங்கினால் என்ன செய்ய வேண்டும்?
அறையின் வெப்பநிலையை சரியாக வைக்க வேண்டும். தூங்கும் போது அறையின் வெப்பநிலை 24°Cக்கு குறைவாக இருக்கக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வெளியேயுள்ள வெப்பநிலைக்கு ஏற்றவாறு ஏசி வெப்பநிலையை மாற்ற வேண்டும். ரொம்ப சூடாக இருந்தால், ஏசியை குறைவான வெப்பநிலையில் வைக்க தோன்றும். ஆனால், அது உடம்புக்கு கெடுதல்.
தொடர்ந்து ஏசியில் இருக்கக் கூடாது. ஏசியை தொடர்ந்து போடுவதால் தூக்கம் கெடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால், ஏசியை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் போடலாம். டைமர் வைத்து ஏசி உபயோகிப்பது நல்லது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}