சென்னை: திருப்போரூரில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற நடைபயணத்தை திட்டமிட்டப்படி தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸிற்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாமகவை பலப்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் புதிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். அதன்படி, ராமதாஸ் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் இன்று தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், சிறப்பு பொதுக்குழுவின் படி பாமக செயல்தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக் கூறிக்கொண்டால் நடவடிக்கை பாயும். நடைப்பயணத்தின் போது பாமக கொடியை யாரும் பயன்படுத்தக்கூடாது. அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாமக தலைமையகம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பாமகவிற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. தொண்டர்களும், நிர்வாகிகளும் இனி வேறெங்கும் செல்ல வேண்டாம் என்று அதிரடியாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அன்புமணி ராமதாஸின் நடைபயணம் நடக்குமா? நடக்காத என்று கட்சி தொண்டர்களிடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திட்டமிட்டபடி பயணம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமதாஸின் பெயர் அச்சிடப்படாத பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}