சென்னை: திருப்போரூரில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற நடைபயணத்தை திட்டமிட்டப்படி தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸிற்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாமகவை பலப்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் புதிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். அதன்படி, ராமதாஸ் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் இன்று தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், சிறப்பு பொதுக்குழுவின் படி பாமக செயல்தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக் கூறிக்கொண்டால் நடவடிக்கை பாயும். நடைப்பயணத்தின் போது பாமக கொடியை யாரும் பயன்படுத்தக்கூடாது. அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாமக தலைமையகம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பாமகவிற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. தொண்டர்களும், நிர்வாகிகளும் இனி வேறெங்கும் செல்ல வேண்டாம் என்று அதிரடியாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அன்புமணி ராமதாஸின் நடைபயணம் நடக்குமா? நடக்காத என்று கட்சி தொண்டர்களிடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திட்டமிட்டபடி பயணம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமதாஸின் பெயர் அச்சிடப்படாத பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}