டில்லி : டில்லி சென்றுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாஜக மேலிட தலைவர்கள் சிலரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாமக.,விலும் தமிழக அரசியலிலும் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமக தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. எம்.பி., என்ற முறையில் அன்புமணி அடிக்கடி டில்லி சென்று வருவது புதிய விஷயம் கிடையாது. அப்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பும் அவர் டில்லி புறப்பட்டு சென்றார். ஆனால் இந்த முறை, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்திப்பதற்கு அன்புமணி நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல பாஜக தலைவர்களை சந்தித்த பிறகு தேர்தல் ஆணையத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது அனைவரின் கவனத்தையும் தற்போது டில்லி பக்கம் திருப்பி உள்ளது.
பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ், கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தானே கட்சியின் தலைவர் என அறிவித்து, அதிரடியாக பலரின் பதவிகளை பறித்து வருகிறார். அதோடு பாஜக.,வுடன் கூட்டணி வைப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறை மீண்டும் அதிமுக.,வுடன் கூட்டணியை புதுப்பிக்கலாம் என்றால், அதிமுக.,வே பாஜக உடன் கூட்டணியை அறிவித்து, தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. இப்போது பாஜக-அதிமுக கூட்டணியில் இணையலாமா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் பாமக இருந்து வருகிறது.
இந்த சமயத்தில் பாஜக மேலிட தலைவர்களை அன்புமணி எதற்காக சந்திக்கிறார்? பாஜக உடன் கூட்டணி வைக்க நினைக்கிறாரா? அல்லது பாமக.,வில் அப்பா-மகன் விவகாரத்தில் சமரச முயற்சியை பாஜக துவக்கி உள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் தேர்தல் ஆணையத்திற்கும் அன்புமணி செல்கிறார் என்றால் கட்சி தொடர்பாக முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}