சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நீக்கம் தொடர்பாக என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்சுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கே நிலவி வருகிறது. நேற்று முன்தினம் அன்புமணியை திடீர் என பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியனார் ராமதாஸ். இனி நானே தலைவர் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி அன்பு மணி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.
இது, பாமக கட்சியினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு தொடர்ந்து ராமதாஸ் வீட்டிலும், அன்புமணி வீட்டிலும் குடும்பத்தினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருவரையும் சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அது மட்டுமின்றி பாமக மூத்த கட்சி உறுப்பினர்களும் இருவரையும் சமாதனப்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாமக தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும்செல்லவில்லை. ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமக கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}