சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நீக்கம் தொடர்பாக என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்சுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கே நிலவி வருகிறது. நேற்று முன்தினம் அன்புமணியை திடீர் என பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியனார் ராமதாஸ். இனி நானே தலைவர் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி அன்பு மணி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

இது, பாமக கட்சியினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு தொடர்ந்து ராமதாஸ் வீட்டிலும், அன்புமணி வீட்டிலும் குடும்பத்தினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருவரையும் சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அது மட்டுமின்றி பாமக மூத்த கட்சி உறுப்பினர்களும் இருவரையும் சமாதனப்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாமக தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும்செல்லவில்லை. ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமக கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}