சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நீக்கம் தொடர்பாக என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்சுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கே நிலவி வருகிறது. நேற்று முன்தினம் அன்புமணியை திடீர் என பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியனார் ராமதாஸ். இனி நானே தலைவர் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி அன்பு மணி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

இது, பாமக கட்சியினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு தொடர்ந்து ராமதாஸ் வீட்டிலும், அன்புமணி வீட்டிலும் குடும்பத்தினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருவரையும் சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அது மட்டுமின்றி பாமக மூத்த கட்சி உறுப்பினர்களும் இருவரையும் சமாதனப்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாமக தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும்செல்லவில்லை. ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமக கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}