சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நீக்கம் தொடர்பாக என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்சுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கே நிலவி வருகிறது. நேற்று முன்தினம் அன்புமணியை திடீர் என பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியனார் ராமதாஸ். இனி நானே தலைவர் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி அன்பு மணி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

இது, பாமக கட்சியினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு தொடர்ந்து ராமதாஸ் வீட்டிலும், அன்புமணி வீட்டிலும் குடும்பத்தினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருவரையும் சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அது மட்டுமின்றி பாமக மூத்த கட்சி உறுப்பினர்களும் இருவரையும் சமாதனப்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாமக தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும்செல்லவில்லை. ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமக கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}