சென்னை: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அவரது கணவர் செளந்தரராஜன், மகள் டாக்டர் பூவினி ஆகிய மூவரிடமும் ஆளுக்கு தலா ரூ. 50,000 ரொக்கம் கையில் இருப்பதாக தேர்தல் ஆவணத்தில் டாக்டர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மீண்டும் மக்கள் பணியாற்றுவதற்காக, அரசியல் களத்தில் மீண்டும் குதித்து விட்டார். தாமரை தமிழ்நாட்டு லோக்சபா தேர்தலில் மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்துடன் இறங்கியுள்ள அவர் தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கலின்போது அவர் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் தனது சொத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்படி பார்க்கும்போது டாக்டர் தமிழிசை பெயரில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை. தமிழிசை, அவரது கணவர் செளந்தரராஜன், மகள் பூவினி ஆகியோரது ரொக்கக் கையிருப்பு ஆளுக்கு ரூ. 50,000 மட்டும்தான்.
வங்கியில் இருப்பு:
டாக்டர் தமிழிசை - 1 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரத்து 286 ரூபாய்
கணவர் டாக்டர் செளந்தரராஜன் - ரூ. 3,92,01,426
மகள் டாக்டர் பூவினி - ரூ. 1,04,61,819
தமிழிசை பெயரில் நிலம், நீச்சு என்று எதுவும் கிடையாது. கார் உள்ளிட்டவையும் கூட அவர் பெயரில் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிடப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டம் மணலியில் 1800 சதுர அடி பரப்பளவில், ஒரு வீடு மட்டும் அவரது பெயரில் உள்ளது. 2001ல் வாங்கப்பட்ட வீடு இது. தற்போது இந்த வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளேன் என்று அடிக்கடி நெக்குருகி கூறும் டாக்டர் தமிழிசைக்கு வங்கியில், ரூ. 58,54,789 அளவுக்கு கடன் பாக்கி உள்ளது.
டாக்டர் தமிழிசை பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு 1,57,40,286 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}