சென்னை: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அவரது கணவர் செளந்தரராஜன், மகள் டாக்டர் பூவினி ஆகிய மூவரிடமும் ஆளுக்கு தலா ரூ. 50,000 ரொக்கம் கையில் இருப்பதாக தேர்தல் ஆவணத்தில் டாக்டர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மீண்டும் மக்கள் பணியாற்றுவதற்காக, அரசியல் களத்தில் மீண்டும் குதித்து விட்டார். தாமரை தமிழ்நாட்டு லோக்சபா தேர்தலில் மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்துடன் இறங்கியுள்ள அவர் தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
வேட்பு மனு தாக்கலின்போது அவர் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் தனது சொத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்படி பார்க்கும்போது டாக்டர் தமிழிசை பெயரில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை. தமிழிசை, அவரது கணவர் செளந்தரராஜன், மகள் பூவினி ஆகியோரது ரொக்கக் கையிருப்பு ஆளுக்கு ரூ. 50,000 மட்டும்தான்.
வங்கியில் இருப்பு:
டாக்டர் தமிழிசை - 1 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரத்து 286 ரூபாய்
கணவர் டாக்டர் செளந்தரராஜன் - ரூ. 3,92,01,426
மகள் டாக்டர் பூவினி - ரூ. 1,04,61,819
தமிழிசை பெயரில் நிலம், நீச்சு என்று எதுவும் கிடையாது. கார் உள்ளிட்டவையும் கூட அவர் பெயரில் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிடப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டம் மணலியில் 1800 சதுர அடி பரப்பளவில், ஒரு வீடு மட்டும் அவரது பெயரில் உள்ளது. 2001ல் வாங்கப்பட்ட வீடு இது. தற்போது இந்த வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளேன் என்று அடிக்கடி நெக்குருகி கூறும் டாக்டர் தமிழிசைக்கு வங்கியில், ரூ. 58,54,789 அளவுக்கு கடன் பாக்கி உள்ளது.
டாக்டர் தமிழிசை பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு 1,57,40,286 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}