டாக்டர் தமிழிசை கையில் எவ்வளவு பணம் இருக்கு தெரியுமா?.. நீங்க நம்பாட்டியும் அதான் நெசம்!

Mar 26, 2024,07:17 PM IST

சென்னை: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அவரது கணவர் செளந்தரராஜன், மகள் டாக்டர் பூவினி ஆகிய மூவரிடமும் ஆளுக்கு தலா ரூ. 50,000 ரொக்கம் கையில் இருப்பதாக தேர்தல் ஆவணத்தில் டாக்டர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.


பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மீண்டும் மக்கள் பணியாற்றுவதற்காக, அரசியல் களத்தில் மீண்டும் குதித்து விட்டார். தாமரை தமிழ்நாட்டு லோக்சபா தேர்தலில் மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்துடன் இறங்கியுள்ள அவர் தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.




வேட்பு மனு தாக்கலின்போது அவர் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் தனது சொத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்படி பார்க்கும்போது டாக்டர் தமிழிசை பெயரில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை. தமிழிசை, அவரது கணவர் செளந்தரராஜன், மகள் பூவினி ஆகியோரது ரொக்கக் கையிருப்பு ஆளுக்கு ரூ. 50,000 மட்டும்தான்.


வங்கியில் இருப்பு:


டாக்டர் தமிழிசை  - 1 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரத்து 286 ரூபாய்

கணவர் டாக்டர் செளந்தரராஜன் - ரூ.  3,92,01,426

மகள் டாக்டர் பூவினி - ரூ. 1,04,61,819


தமிழிசை பெயரில் நிலம், நீச்சு என்று எதுவும் கிடையாது. கார் உள்ளிட்டவையும் கூட அவர் பெயரில் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிடப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டம் மணலியில் 1800 சதுர அடி பரப்பளவில், ஒரு வீடு மட்டும் அவரது பெயரில் உள்ளது. 2001ல் வாங்கப்பட்ட வீடு இது. தற்போது இந்த வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.


பாஜகவுக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளேன் என்று அடிக்கடி நெக்குருகி கூறும் டாக்டர் தமிழிசைக்கு வங்கியில்,  ரூ. 58,54,789 அளவுக்கு கடன் பாக்கி உள்ளது.


டாக்டர் தமிழிசை பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு 1,57,40,286 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்