மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

Nov 23, 2024,05:38 PM IST

சென்னை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், பாஜக  மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னையில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 20ம் தேதி ஓரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல ஜார்க்கண்டில் உள்ள 81 தொகுதிகளுக்கும் நவம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.




மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 220 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களிலும், மற்ற கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மகாராஜ்டிராவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 145 ஆகும்.  இதில், பாஜக 127 இடங்களில்,  ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 56 தொகுதிகளிலும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து  வருகின்றன. 

ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை தி.நகர் கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொண்டர்களோடு சேர்ந்து படு சந்தோஷமாக பட்டாசு வெடித்தார். சேலையை வரிந்து கண்டிக்கொண்டு வெடி வெடித்தும், லட்டு, ஜிலேபி போன்ற இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார். அவரது முகமே உற்சாகத்தில் பொங்கி வழிந்தது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை பேசுகையில்,  தமிழக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஒட்டு மொத்த பாரத தேசத்தினர் இந்தியா கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். 2026 தமிழ்நாடு தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்  என்பதை இன்றே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இன்று எப்படி மகாராஷ்டிராவின் வெற்றியை கொண்டாடுகிறோமோ, அதே போல 2026 தமிழகத்தில் பாஜக கூட்டணியில் வெற்றியை கொண்டாடுவோம் என்று தெரிவித்தார்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, அது பிரியங்கா காந்தியின் தேர்தல் முடிவு கிடையாது.. அது இந்தியா கூட்டணியின் முடிவுரை என்ற பதிலையும் அளித்தார் டாக்டர் தமிழிசை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்