சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது பெயரை பேசாமல் நிரந்தரமாக "அக்கா" என்றே மாற்றி வைத்து விடலாம்.. அந்த அளவுக்கு தொகுதியில் அவரது பெயர் அக்கா என்ற ரீச் ஆகி விட்டது. போகும் இடமெல்லாம் அவரும் தனது பாசத்தை அள்ளித் தெளித்துச் செல்கிறார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். தினசரி வாகனப் பிரச்சாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் டாக்டர் தமிழிசை, தன்னை அக்கா என்றே பிரகடனப்படுத்தி பிரச்சாரத்தில் பேசுகிறார். அவரது பிரச்சாரம் பலரையும் கவர்ந்துள்ளது. இயல்பாக பேசுகிறார், ஜாலியாக பேசுகிறார், தனது வாக்குறுதிகளையும் அழகாக எடுத்து வைக்கிறார்.

போகும் இடமெல்லாம் சாதாரண மக்களைக் கவரும் வகையில் பேசுகிறார். வழியில் எங்காவது குப்பைகள் கிடந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி, இப்படி குப்பைகளை கூட அகற்றாத நிர்வாகம்தான் நம்மிடம் உள்ளது. இதைப் பார்த்தால் எனக்கு குப்பையாகத் தெரியவில்லை. டெங்குவாகத் தோன்றுகிறது, காலராவாகத் தோன்றுகிறது என்று டைமிங்காக அடிக்கிறார்.
அதேபோல வழியில் ஏதாவது டீக்கடை, வடை கடை தென்பட்டாலும் விடுவதில்லை. அங்கும் புகுந்து விடுகிறார். ஜாலியாக பேசியபடி டீ சாப்பிட்டும், வடை சாப்பிட்டும் மக்களிடையே எளிமையாக பேசுகிறார். இந்த நிலையில் தி.நகர் நல்லாங்குப்பம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அவர் ஒரு வீட்டைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னார். என்னடா என்று பார்த்தால் அந்த வீட்டில் அதிரசம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழிசையைப் பார்த்ததும் சூடாக நாலு அதிரசத்தை எடுத்து காகிதத்தில் வைத்து அன்போடு கொடுத்தார்கள். அதை பாசத்தோடு பெற்றுக் கொண்ட அதிரசம், இந்தப் பக்கம் கிராஸ் பண்ணும்போது அதிரசம் வாசம் மூக்கைத் துளைச்சுருச்சு.. அதான் நிறுத்தச் சொன்னேன் என்று புன்னகையுடன் கூறியபடி ஒரு அதிரசத்தை ஆன் தி ஸ்பாட்டிலேயே சுவைத்து சூப்பரா இருக்கு என்று கண்களாலேயே அந்த அம்மாவிடம் சந்தோஷமாக தெரிவித்து விட்டு விடை பெற்றார்.
பிரச்சாரக் களத்தில் களக்கும் டாக்டர் தமிழிசை, தென் சென்னையையும் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடர்கின்றனர் பாஜகவினர்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}