தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா ஏற்பு.. சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் தெலங்கானா, புதுச்சேரி ஒப்படைப்பு!

Mar 19, 2024,11:56 AM IST

டெல்லி: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுள்ளார். மேலும் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில்,நேற்று பேட்டி கொடுத்த தமிழிசையும், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டிலிருந்துதான் போட்டியிடுவேன். புதுச்சேரியில் போட்டியிடவில்லை.எந்தத் தொகுதி என்பதை கட்சி மேலிடம் தான் அறிவிக்கும். ஓரிரு நாளில் தொகுதி எது என்பதை பாஜக மேலிடமே அறிவிக்கும். நான் சொல்ல முடியாது என்று கூறினார்.




இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்து  தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பிய கடிதங்களை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னரின் பொறுப்புகளை சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் என்றும் குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளிட்ட செய்தி குறிப்பில், தமிழிசையின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்புகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் தென்சென்னை அல்லது திருநெல்வேலி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்