ஜூன் 5ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு.. கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா!

Apr 28, 2023,12:54 PM IST
சென்னை:  சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ஜூன் 5ம் தேதி அவர் சென்னை வருகிறார்.

சென்னை கிண்டியில் மிகப் பிரமாண்டமான மருத்துவமனை ரூ. 230 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது. 1000 படுக்கை வசதி கொண்ட இந்த பன்னோக்கு மருத்துவமனை அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அடிக்கல்நாட்டப்பட்டு இரண்டே ஆண்டுகளில் இதை அரசு கட்டி முடித்துள்ளது.



இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அழைப்பிதழைக் கொடுத்தார். அவரது அழைப்பை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஏற்றுக் கொண்டு ஒப்புதல் கொடுத்துள்ளார். இதையடுத்து  ஜூன் 5ம் தேதி மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளார்.

கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இந்த பிரமாண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானம் முடிந்து செப்டம்பர் மாதம்தான் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்கூட்டியே பணிகள் முடிந்ததால் ஜூன் மாதமே திறக்கப்படுகிறது.

5.5 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பு கொண்ட இந்த மருத்துவமனை 4.89 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் உருவாகியுள்ளது. சென்னைக்குக் கிடைத்துள்ள இரண்டாவது அரசு பன்னோக்கு மருத்துவமனை இது. முதல் மருத்துவமனை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையாகும். திமுக அரசால் கட்டப்பட்ட சட்டசபை வளாகம்தான் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஓமந்தூராரர் அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்