சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் போன்றும், திரை பிரபலங்கள் போன்றும் வேடமிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள் மேடைக் கலைஞர்கள்.
சிறந்த நடிகராகவும், அரசியல்வாதியாகவும், திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28 இல் மறைந்தார். இவரின் இறப்பு செய்தி கேட்டு ரசிகர்கள், தொண்டர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் கண்ணீர் மல்க தங்களின் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். அவர் செய்த நன்மைகளை தினமும் மக்கள் பேசி பாராட்டி வருகின்றனர். இவரை நினைவிடத்தில் சென்றாவது பார்க்க வேண்டும் என தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், திரை பிரபலங்கள் என விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஏராளமான கலைஞர்கள் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், வானத்தைப் போல, கஜேந்திரன், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு படங்களின் உள்ள கதாபாத்திரம் போன்று வேடமிட்டு விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இது மட்டுமல்லாமல் ரஜினிகாந்த், அஜித், டி ராஜேந்தர் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் போன்றும், எம்.ஜி.ஆர், காந்தியடிகள், அறிஞர் அண்ணா, முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்கள் போன்றும் வேடமணிந்து மலர் தூவி விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு வித்தியாசமான முறையில் வந்து அஞ்சலி செலுத்திய இந்தக் கலைஞர்களைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது. விஜயகாந்த் வேடத்தில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர்களை அனைவரும் பாராட்டினர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}