பிரதமர் நதன்யாகு வீட்டை நோக்கி வந்த டிரோன்.. இஸ்ரேலுக்கு மரண பயத்தைக் காட்டிய லெபனான்!

Oct 19, 2024,06:35 PM IST

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை நோக்கி வந்த டிரோனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த சமயத்தில் அந்த வீட்டில் பிரதமரோ அல்லது அவரது குடும்பத்தினரோ யாரும் இல்லை. இந்த டிரோன் தாக்குதலால் யாரும் காயமடையவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையிலான உரசல் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தரப்பில் ஏதாவது பெரிய அசம்பாவிதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இது பெரும் போராக உருவெடுக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. இஸ்ரேலைக் குறி வைத்து லெபனான், ஹமாஸ், ஈரான் ஆகியவை  தாக்கி வருகின்றன. இஸ்ரேலும் முரட்டுத்தனமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.




நேற்றுதான் ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாகக் கொன்றது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமரை லெபனான் குறி வைத்து டிரோன் தாக்குதலை நடத்தியதால் பரபரப்பு கூடியுள்ளது. இஸ்ரேலின் சீசரியா என்ற நகரில் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவின் வீடு உள்ளது. இந்த வீட்டை நோக்கி ஒரு டிரோன் பறந்து வந்தது. ஆனால் வீட்டின் மீது விழாமல் அருகில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது பிரதமரும், அவரது குடும்பத்தினரும் அந்த வீட்டில் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


லெபனானிலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த டிரோனை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுக்க இயலாமல் போனது தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை இந்த டிரோன் வீட்டில் விழுந்து, பிரதமரும் அவரது குடும்பத்தினரும் இருந்திருந்தால் விபரீதமாக போயிருக்கும் என்பதால் இஸ்ரேல் தரப்பும் அதிர்ச்சியில் உள்ளது. அதேசமயம், மேலும் இரு டிரோன்களை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தாக்கி தகர்த்து விட்டன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்