விசாகப்பட்டனம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில், மது கொடுக்க மறுத்த ஒயின்ஷாப் கடைக்காரர்கள் மீது கோபமடைந்த குடிகாரர் ஒருவர், கடையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தி விட்டார்.
மதூர்வாடா என்ற பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. தீவைத்துக் கொளுத்திய நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் பெயர் மது. இவர் மதூர்வாடா பகுதியில் உள்ள ஒயின்ஷாப்புக்கு கடை மூடும் நேரத்தில் வந்துள்ளார். விற்பனை நேரம் முடிவடைந்து விட்டதால் மது தர முடியாது என்று கடையில் இருந்தோர் கூறியுள்ளனர். சிறிது நேரம் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. பின்னர் மது அங்கிருந்து போய் விட்டார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து பெட்ரோல் பாட்டிலுடன் அங்கு வந்த மது, கடையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார். கடையில் இருந்தோர் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர்களையும் எரிக்கப் பார்த்தார். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தனர். கடை முழுக்க தீப்பற்றி எரிந்து சாம்பலாகிப் போனது. கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ல பொருட்கள், கம்ப்யூட்டர், பிரின்டர் ஆகியவையும் நாசமாகிப் போய் விட்டன.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குடிகார மதுவைக் கைது செய்துள்ளனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}