சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 8 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம், ஒரு சில நாட்கள் மழை பெய்ததால் வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்ததால் வெயிலே இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் குளுமையான நல்ல சீதோசன நிலை காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே வறண்ட கிழக்கு காற்று ஊடுருவி இருப்பதால் கடல் காற்று முற்றிலும் தடைப்பட்டதன் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மதிய வேலைகளில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 8 தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}