சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல நாளை முதல் இ பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இ பாஸ் வழங்குவது இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான பதிவு இன்று தொடங்கியது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வருவதாலும், இதனால் அங்கு வாகன பெருக்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், இபாஸ் நடைமுறை பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியாளர்கள் இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த இ-பாஸ் பதிவு இன்று காலை 6 மணிக்கு தொடங்கி, ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இது குறித்து தமிழக அரசு சில விளக்கங்களை வெளியிட்டுள்ளது . அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வரவேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருவோருக்கு வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும்.
இ பாஸ் பெற எப்படி விண்ணப்பிப்பது:
வெளியூர் பயணிகள் தங்களின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
உள்ளூர் சுற்றுலா பயணிகள் தங்களின் மொபைல் எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
கொடைக்கானல், ஊட்டிக்கு செல்பவர்கள் https://epass.tnega.org/home இணையதளம் வாயிலாக தங்களது சுய விவரங்கள், வாகனத்தின் எண்கள், தங்குமிடம், அங்கு எத்தனை நாள் இருப்பார்கள் போன்ற விவரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}