மின் இணைப்பு நம்பரைக் கொடுங்க.. கரண்ட் பிரச்சினை சரியாகும்.. அசத்தும் அமைச்சர்

Apr 30, 2023,10:33 AM IST
சென்னை: கரண்ட் கட் என்று கூறி சமூக வலைதளங்களில் பலரும் பீதி கிளப்பும் நிலையில் மின்சாரத் துறை அமைச்ச் செந்தில் பாலாஜி அதிரடியாக அங்கெல்லாம் விசிட் அடித்து பிரச்சினைகளை சரி செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி விட்டது. வழக்கமாகவே கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதனால் மின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கும். இதில் ஆட்சி பாகுபாடெல்லாம் கிடையாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மின்வெட்டுப் பிரச்சினை வரத்தான் செய்யும். காரணம், நமது மின் கட்டமைப்பு இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டியிருப்பதால்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் எங்க வீட்ல கரண்ட் இல்லை, எங்க ஏரியாவுல கரண்ட் இல்லை என்று போஸ்ட் போட்டு வருகின்றனர். இவர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே நேரடியாக களம் இறங்கி தீர்வு கண்டு வருகிறார்.




சமீபத்தில் கூட ஒருவர் ஒரு பத்திரிகையில் வெளியான கார்ட்டூனைப் போட்டு கரண்ட் கட் ஆரம்பித்து விட்டது என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு பதில் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சகோதரரே உங்களது மின் இணைப்பு எண்ணைக் கூறவும் என்று கேட்டிருந்தார்.  ஆனால் அந்த நபரோ போட்ட டிவீட்டையே டெலிட் செய்து விட்டார்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரப் பிரச்சினை தொடர்பாக புகார் கூறிய ஒருவருக்கு பிரச்சினையை உடனடியாக சரி செய்து பதிலும் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுதொடர்பாக குமரேசன் என்பவர் போட்ட டிவீட்டில், சார், நான் புதுகை மாவட்டம், ஆ.கோவில் தாலுகா, கரூர் அருகில்  நிறைமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் உள்ள மின்மாற்றியில் இரவு நேர்த்தில் சரியான அளவு மின்சாரம் கிடைப்பது இல்லை. இரவு காற்றாடி, குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி அனைந்து விடுகிறது என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்புச் சகோதரரே, உங்கள் இல்லத்தில் இருந்த மின்னழுத்த குறைபாடு சீர் செய்யப்பட்டது.. அலைபேசி எண்களுக்கு மாற்றாக,  நண்பர்கள் மின் இணைப்பு எண்ணை வழங்கினால், விரைந்து குறைபாடுகளை களைய ஏதுவாக இருக்கும்.. என்று கூறியுள்ளார்.

இப்படி எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழ்நாடு அமைச்சர்கள் களம் இறங்கினால், அதிகாரிகளும் துரிதமாக வேலை பார்ப்பார்கள், மக்களுக்கும் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.. சிஸ்டமும் சற்று சரியாகும்.. நல்ல விஷயம்தான், பாராட்டுவோம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்