மின் இணைப்பு நம்பரைக் கொடுங்க.. கரண்ட் பிரச்சினை சரியாகும்.. அசத்தும் அமைச்சர்

Apr 30, 2023,10:33 AM IST
சென்னை: கரண்ட் கட் என்று கூறி சமூக வலைதளங்களில் பலரும் பீதி கிளப்பும் நிலையில் மின்சாரத் துறை அமைச்ச் செந்தில் பாலாஜி அதிரடியாக அங்கெல்லாம் விசிட் அடித்து பிரச்சினைகளை சரி செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி விட்டது. வழக்கமாகவே கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதனால் மின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கும். இதில் ஆட்சி பாகுபாடெல்லாம் கிடையாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மின்வெட்டுப் பிரச்சினை வரத்தான் செய்யும். காரணம், நமது மின் கட்டமைப்பு இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டியிருப்பதால்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் எங்க வீட்ல கரண்ட் இல்லை, எங்க ஏரியாவுல கரண்ட் இல்லை என்று போஸ்ட் போட்டு வருகின்றனர். இவர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே நேரடியாக களம் இறங்கி தீர்வு கண்டு வருகிறார்.




சமீபத்தில் கூட ஒருவர் ஒரு பத்திரிகையில் வெளியான கார்ட்டூனைப் போட்டு கரண்ட் கட் ஆரம்பித்து விட்டது என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு பதில் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சகோதரரே உங்களது மின் இணைப்பு எண்ணைக் கூறவும் என்று கேட்டிருந்தார்.  ஆனால் அந்த நபரோ போட்ட டிவீட்டையே டெலிட் செய்து விட்டார்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரப் பிரச்சினை தொடர்பாக புகார் கூறிய ஒருவருக்கு பிரச்சினையை உடனடியாக சரி செய்து பதிலும் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுதொடர்பாக குமரேசன் என்பவர் போட்ட டிவீட்டில், சார், நான் புதுகை மாவட்டம், ஆ.கோவில் தாலுகா, கரூர் அருகில்  நிறைமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் உள்ள மின்மாற்றியில் இரவு நேர்த்தில் சரியான அளவு மின்சாரம் கிடைப்பது இல்லை. இரவு காற்றாடி, குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி அனைந்து விடுகிறது என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்புச் சகோதரரே, உங்கள் இல்லத்தில் இருந்த மின்னழுத்த குறைபாடு சீர் செய்யப்பட்டது.. அலைபேசி எண்களுக்கு மாற்றாக,  நண்பர்கள் மின் இணைப்பு எண்ணை வழங்கினால், விரைந்து குறைபாடுகளை களைய ஏதுவாக இருக்கும்.. என்று கூறியுள்ளார்.

இப்படி எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழ்நாடு அமைச்சர்கள் களம் இறங்கினால், அதிகாரிகளும் துரிதமாக வேலை பார்ப்பார்கள், மக்களுக்கும் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.. சிஸ்டமும் சற்று சரியாகும்.. நல்ல விஷயம்தான், பாராட்டுவோம்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்