கொச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் வைத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் 5 நாட்கள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் அவரது தம்பி அசோக் குமார், அவரது மனைவி ஆகியோரையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் கொச்சியில் பதுங்கியிருந்த அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
அவரை சென்னைக்கு அழைத்து வரலாம் அல்லது டெல்லிக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவர் திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தம்பியும் இப்போது சிறைக்குப் போகவிருப்பது கரூர் அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}