கொச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் வைத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் 5 நாட்கள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் அவரது தம்பி அசோக் குமார், அவரது மனைவி ஆகியோரையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் கொச்சியில் பதுங்கியிருந்த அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
அவரை சென்னைக்கு அழைத்து வரலாம் அல்லது டெல்லிக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவர் திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தம்பியும் இப்போது சிறைக்குப் போகவிருப்பது கரூர் அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
{{comments.comment}}