கொச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் வைத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் 5 நாட்கள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் அவரது தம்பி அசோக் குமார், அவரது மனைவி ஆகியோரையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் கொச்சியில் பதுங்கியிருந்த அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
அவரை சென்னைக்கு அழைத்து வரலாம் அல்லது டெல்லிக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவர் திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தம்பியும் இப்போது சிறைக்குப் போகவிருப்பது கரூர் அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}