கொச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் வைத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் 5 நாட்கள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.
இந்த நிலையில் அவரது தம்பி அசோக் குமார், அவரது மனைவி ஆகியோரையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் கொச்சியில் பதுங்கியிருந்த அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
அவரை சென்னைக்கு அழைத்து வரலாம் அல்லது டெல்லிக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவர் திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தம்பியும் இப்போது சிறைக்குப் போகவிருப்பது கரூர் அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}