டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
டெல்லி மாநில அரசின் மதுக் கொள்கையில் நடந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே ஆம் ஆத்மி தலைவர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இப்போது இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விசாரிக்கவுள்ளது அமலாக்கத்துறை. இன்று விசாரணைக்கு அவர் ஆஜராகவுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் படு சூடாக காணப்படுகிறது. கெஜ்ரிவாலைக் கைது செய்தாலும் அவர் பதவி விலக மாட்டார். சிறையிலிருந்தே ஆட்சியையும், கட்சியையும் நடத்துவார் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கோபாவேசமாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் வீடு மட்டுமல்லாமல், அவருக்குத் தொடர்புடைய 9 இடங்களில் ரெய்டுகள் நடக்கின்றந.
தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்குமார் ஆனந்த், இதற்கு முன்பு கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}