டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
டெல்லி மாநில அரசின் மதுக் கொள்கையில் நடந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே ஆம் ஆத்மி தலைவர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இப்போது இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விசாரிக்கவுள்ளது அமலாக்கத்துறை. இன்று விசாரணைக்கு அவர் ஆஜராகவுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் படு சூடாக காணப்படுகிறது. கெஜ்ரிவாலைக் கைது செய்தாலும் அவர் பதவி விலக மாட்டார். சிறையிலிருந்தே ஆட்சியையும், கட்சியையும் நடத்துவார் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கோபாவேசமாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் வீடு மட்டுமல்லாமல், அவருக்குத் தொடர்புடைய 9 இடங்களில் ரெய்டுகள் நடக்கின்றந.
தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்குமார் ஆனந்த், இதற்கு முன்பு கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}