டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
டெல்லி மாநில அரசின் மதுக் கொள்கையில் நடந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே ஆம் ஆத்மி தலைவர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இப்போது இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விசாரிக்கவுள்ளது அமலாக்கத்துறை. இன்று விசாரணைக்கு அவர் ஆஜராகவுள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் படு சூடாக காணப்படுகிறது. கெஜ்ரிவாலைக் கைது செய்தாலும் அவர் பதவி விலக மாட்டார். சிறையிலிருந்தே ஆட்சியையும், கட்சியையும் நடத்துவார் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கோபாவேசமாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் வீடு மட்டுமல்லாமல், அவருக்குத் தொடர்புடைய 9 இடங்களில் ரெய்டுகள் நடக்கின்றந.
தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்குமார் ஆனந்த், இதற்கு முன்பு கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தொடக்கம்!
{{comments.comment}}