சென்னை: அமைச்சர் கே.என் நேருவின் மகனான பெரம்பலூர் எம்.பி அருண் மற்றும் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.பி.கே குழுமம் மற்றும் டி.வி.ஹெச் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூபாய் 100 கோடி ரொக்க பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் நடத்தக்கூடிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அடையாறு தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆழ்வார்பேட்டையில் கே என் நேருவின் மகன் எம்.பி அருணுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தற்போது அமலாக்க துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையை முன்னிட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெற்றதா என்ற கோணத்தில் அமலாக்க துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக மூத்த அமைச்சரான கே.என் நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர் நோக்க திமுக தயாராகி வரும் நிலையில், திமுக அமைச்சர் மகன் மற்றும் தம்பி வீடுகளில் சோதனை நடைபெறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}