சென்னை: அமைச்சர் கே.என் நேருவின் மகனான பெரம்பலூர் எம்.பி அருண் மற்றும் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.பி.கே குழுமம் மற்றும் டி.வி.ஹெச் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூபாய் 100 கோடி ரொக்க பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் நடத்தக்கூடிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அடையாறு தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஆழ்வார்பேட்டையில் கே என் நேருவின் மகன் எம்.பி அருணுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தற்போது அமலாக்க துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையை முன்னிட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெற்றதா என்ற கோணத்தில் அமலாக்க துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக மூத்த அமைச்சரான கே.என் நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர் நோக்க திமுக தயாராகி வரும் நிலையில், திமுக அமைச்சர் மகன் மற்றும் தம்பி வீடுகளில் சோதனை நடைபெறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}