அமைச்சர் கே.என் நேருவின்..மகன், தம்பி வீடுகளில்.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Apr 07, 2025,05:39 PM IST

சென்னை: அமைச்சர் கே.என் நேருவின் மகனான பெரம்பலூர் எம்.பி அருண் மற்றும் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில்  நடைபெற்று வருகிறது.


கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.பி.கே குழுமம் மற்றும் டி.வி‌.ஹெச் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூபாய் 100 கோடி  ரொக்க பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 


இதன் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் நடத்தக்கூடிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அடையாறு தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  இன்று அதிகாலை முதலே அமலாக்கத் துறையினர்  அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 




இதேபோல் ஆழ்வார்பேட்டையில் கே என் நேருவின் மகன் எம்.பி அருணுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தற்போது அமலாக்க துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையை முன்னிட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



இந்த சோதனையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெற்றதா என்ற கோணத்தில் அமலாக்க துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக மூத்த அமைச்சரான கே.என்  நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர் நோக்க திமுக தயாராகி வரும் நிலையில், திமுக அமைச்சர் மகன் மற்றும் தம்பி வீடுகளில் சோதனை நடைபெறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்