டெல்லி: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் , எக்ஸ் பிரிவு, ஒய் பிரிவு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மிக உயர் ரக பாதுகாப்பு என்பது இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவு தான். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு இதுவரைக்கும் பிரதமர், முன்னாள் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இதன்காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சகம், எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது Z+ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜூலை 7ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}