டெல்லி: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் , எக்ஸ் பிரிவு, ஒய் பிரிவு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மிக உயர் ரக பாதுகாப்பு என்பது இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவு தான். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு இதுவரைக்கும் பிரதமர், முன்னாள் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இதன்காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சகம், எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது Z+ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜூலை 7ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}