சென்னை: FIRல் குறிப்பிட்ட அந்த சார் யார்..? Sir ஐ காப்பாற்றியது யார்..? ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த sir ஐ, எந்த சாரானாலும் காப்பாற்ற முடியாது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 90 ஆயிரம் அவதாரம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றமும் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். ஆனால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக வழக்கு தீர்ப்பிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது,
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.
பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.
அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.
FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?
#SIRஐ_காப்பாற்றியது_யார் ?
இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது.
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்,
அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது என கூறியுள்ளார்.
Rain rain come again.. மே மாதத்தில் இந்தியாவில் மழை அளவு 125 சதவீதம் அதிகரிப்பு!
இந்தியாவுடனான மோதலை.. மதப் பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தான்.. நோஸ்கட் கொடுத்த மலேசியா
உங்க கனவை RCB நிறைவேத்திருச்சு.. SBI கனவை நீங்க நிறைவேத்துங்க.. மல்லையாவுக்கு நூதன கோரிக்கை!
IPL 2025 Final பெங்களுரு அணி த்ரில் வெற்றி...முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி
IPL 2025 Final...விராத் அவுட்...கை நழுவி போன சாதனை...ரசிகர்கள் ஏமாற்றம்
கமல்ஹாசன் தவறாக பேசவில்லை... மன்னிப்பு கேட்க கூடாது: நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்!
தேதிமுகவை அழைக்கும் காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் இணைந்தால் பலன் உண்டா.. முதல்ல இடம் இருக்கா?
கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் தள்ளி வைப்பு.. ராஜ்கமல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
ஒரே நாளில் 8 பேர் படுகொலை.. மது, கஞ்சா தான் காரணம்.. அரசிற்கு அக்கறை இல்லை: டாக்டர் அன்புமணி காட்டம்
{{comments.comment}}