பெருகும் முதியோர் இல்லங்கள்.. வருத்தம்தான்.. ஆனாலும் ஒரு பாசிட்டிவ் பாயின்ட் இருக்கே!

Jan 08, 2026,10:05 AM IST

- தி.மீரா


இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் குடும்ப அமைப்புகள் பெரிதும் மாறிவிட்டன. கூட்டு குடும்பங்கள் குறைந்து, தனிக் குடும்பங்கள் அதிகரித்துள்ளதால் முதியோர்களை கவனிப்பது பல குடும்பங்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இப்படியான சூழ்நிலையில் முதியோர் இல்லங்கள் உருவாகியுள்ளன. பலரின் பார்வையில் இது வருத்தமளிக்கும் மாற்றமாக தோன்றினாலும், உண்மையில் முதியோர் இல்லத்தின் வருகை பல விதங்களில் நன்மையாகும்.


முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகள் முறையாக வழங்கப்படுகின்றன. வீட்டில் தனிமையில் தவிக்கும் முதியோருக்கு, இங்கு அவர்களுடன் வயதிலும் அனுபவத்திலும் ஒத்தவர்களின் நட்பு கிடைக்கிறது. இதனால் மனச்சோர்வு குறைந்து, மனநிறைவு அதிகரிக்கிறது.




மேலும், சில முதியோர்கள் உடல் நலக் குறைவு அல்லது தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படுவோர் ஆவார்கள். வேலைக்கு செல்லும் பிள்ளைகள் எப்போதும் அவர்களை கவனிக்க இயலாத சூழலில், முதியோர் இல்லங்கள் சிறந்த தீர்வாக அமைகின்றன. பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான பராமரிப்பு வழங்கப்படுவது ஒரு முக்கிய நன்மையாகும்.


முதியோர் இல்லங்கள் பெற்றோரைக் கைவிடும் இடமாக அல்ல; அவர்களுக்கு மரியாதையுடன் வாழும் வாய்ப்பை வழங்கும் இடமாகப் பார்க்க வேண்டும். தன்னிச்சையாக, விருப்பத்துடன் இவ்விடங்களில் வாழத் தேர்வு செய்கிற முதியோர்களும் இன்று அதிகரித்து வருகின்றனர். இது அவர்களின் சுயமரியாதையையும் சுயநிலையையும் பாதுகாக்கிறது.


முடிவாக, முதியோர் இல்லத்தின் வருகை சமூக மாற்றத்தின் ஒரு வெளிப்பாடாகும். குடும்ப அன்பை மாற்ற முடியாவிட்டாலும், முதியோர் இல்லங்கள் முதியோரின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மனநலத்திற்கு ஒரு நல்ல துணையாக அமைகின்றன. ஆகவே, சரியான முறையில் செயல்படும் முதியோர் இல்லங்களின் வருகை நன்மையே ஆகும்.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்