இந்தியா ஆவலோடு எதிர்பார்த்து வந்த லோக்சபா தேர்தல் தேதி.. நாளை மாலை அறிவிப்பு!

Mar 15, 2024,07:51 PM IST

டெல்லி:  இந்தியா மொத்தமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை மாலை அறிவிக்கவுள்ளது.


இந்தியாவில் இது தேர்தல் திருவிழா காலம். தேர்தல் வந்தால்தான் மக்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறுகிறார்கள். தங்களுக்குக் கிடைத்துள்ள ஜனநாயக உரிமையை, தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களை ஆளுவோரை மக்கள் தேர்ந்தெடுக்கும் திருவிழா இது.




உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையைக் கொண்ட இந்தியாவில் மக்களவைக்கு நடைபெறும் தேர்தல் மிகப் பெரியது. உலகிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தேர்தலும் கூட. இந்தத் தேர்தலுக்கான தேதியை நாளை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.


தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நாளை செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர். அப்போது லோக்சபா தேர்தல் தேதி, சில மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகளை அறிவிக்கவுள்ளனர்.


முன்னதாக இன்று 3 ஆணையர்களும் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். தேர்தல் ஆணையர்கள் இருவரும் இப்போதுதான் பதவியேற்றுள்ளனர் என்பதால் அவர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் பல்வேறு நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார். இதையடுத்து நாளை செய்தியாளர்கள் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்