டெல்லி: மே 7ஆம் தேதி நடந்து முடிந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. மே ஏழாம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த மூன்றாம் கட்ட தேர்தல், குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
பொதுமக்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.
மே ஏழாம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 85.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் 5 தொகுதிகளில் 59.15 சதவிகிதமும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளில் 71.98%, கோவாவில் 2 தொகுதிகளில் 76.06 சதவிகிதமும், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி/டாமன் மற்றும் டையூ 2 தொகுதிகளில் 71.31 சதவீதமும், குஜராத் 25 தொகுதிகளில் 60.13 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 71.84 சதவீதமும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளில் 63.55%, உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் 57.55%, மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகளில் 66.75%, மேற்கு வங்கத்தில் நாலு தொகுதிகளில் 77.53% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}