டெல்லி: மே 7ஆம் தேதி நடந்து முடிந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. மே ஏழாம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த மூன்றாம் கட்ட தேர்தல், குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
பொதுமக்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.
மே ஏழாம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 85.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் 5 தொகுதிகளில் 59.15 சதவிகிதமும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளில் 71.98%, கோவாவில் 2 தொகுதிகளில் 76.06 சதவிகிதமும், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி/டாமன் மற்றும் டையூ 2 தொகுதிகளில் 71.31 சதவீதமும், குஜராத் 25 தொகுதிகளில் 60.13 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 71.84 சதவீதமும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளில் 63.55%, உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் 57.55%, மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகளில் 66.75%, மேற்கு வங்கத்தில் நாலு தொகுதிகளில் 77.53% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}