லோக்சபா தேர்தல் கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது.. விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தல் நடத்த திட்டம்?

Apr 30, 2024,05:15 PM IST

டெல்லி:  லோக்சபா தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவுடன் சேர்த்து விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.


மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இதில், தமிழ்நாட்டுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவின்போது தேர்தல் நடந்தது. அத்தோடு விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.




இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் அந்தத் தொகுதி தற்போது காலியாக உள்ளது. 


இந்தப் பின்னணியில் கடைசி கட்ட லோக்சபா தேர்தலின்போது விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் அந்தத் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது லோக்சபா தேர்தல் இன்னும் முடிவடையாமல் உள்ளதால், இத்தோடு சேர்த்து விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தலை நடத்தி முடித்து விட்டால் பணிகள் எளிதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.


அனேகமாக கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்