டெல்லி: லோக்சபா தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவுடன் சேர்த்து விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இதில், தமிழ்நாட்டுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவின்போது தேர்தல் நடந்தது. அத்தோடு விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் அந்தத் தொகுதி தற்போது காலியாக உள்ளது.
இந்தப் பின்னணியில் கடைசி கட்ட லோக்சபா தேர்தலின்போது விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் அந்தத் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது லோக்சபா தேர்தல் இன்னும் முடிவடையாமல் உள்ளதால், இத்தோடு சேர்த்து விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தலை நடத்தி முடித்து விட்டால் பணிகள் எளிதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.
அனேகமாக கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}