டெல்லி: லோக்சபா தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவுடன் சேர்த்து விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இதில், தமிழ்நாட்டுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவின்போது தேர்தல் நடந்தது. அத்தோடு விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் அந்தத் தொகுதி தற்போது காலியாக உள்ளது.
இந்தப் பின்னணியில் கடைசி கட்ட லோக்சபா தேர்தலின்போது விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் அந்தத் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது லோக்சபா தேர்தல் இன்னும் முடிவடையாமல் உள்ளதால், இத்தோடு சேர்த்து விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தலை நடத்தி முடித்து விட்டால் பணிகள் எளிதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.
அனேகமாக கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}