டெல்லி: லோக்சபா தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவுடன் சேர்த்து விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இதில், தமிழ்நாட்டுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவின்போது தேர்தல் நடந்தது. அத்தோடு விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் அந்தத் தொகுதி தற்போது காலியாக உள்ளது.
இந்தப் பின்னணியில் கடைசி கட்ட லோக்சபா தேர்தலின்போது விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் அந்தத் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது லோக்சபா தேர்தல் இன்னும் முடிவடையாமல் உள்ளதால், இத்தோடு சேர்த்து விக்கிரவாண்டிக்கும் இடைத் தேர்தலை நடத்தி முடித்து விட்டால் பணிகள் எளிதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.
அனேகமாக கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}