திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி சர்ச்சையாக பேசியதாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் சேர்த்து மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு 25 மக்களவைத் தொகுதிகளும்,175 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, அரக்கன், விலங்கு, திருடன், மக்களை காட்டி கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் என பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.

இது ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் லெல்லா அப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார். அந்த ஆடியோவில் தேர்தல் விதிகளை மீறியதாக பேச்சு இருந்தது தெரியவந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 48 மணி நேரத்தில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுவரை சந்திரபாபு நாயுடு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்படவில்லை.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}