திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி சர்ச்சையாக பேசியதாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் சேர்த்து மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு 25 மக்களவைத் தொகுதிகளும்,175 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, அரக்கன், விலங்கு, திருடன், மக்களை காட்டி கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் என பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.

இது ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் லெல்லா அப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார். அந்த ஆடியோவில் தேர்தல் விதிகளை மீறியதாக பேச்சு இருந்தது தெரியவந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 48 மணி நேரத்தில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுவரை சந்திரபாபு நாயுடு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்படவில்லை.
ஒரு மிடறு!
Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
{{comments.comment}}