விளக்கம் கொடுங்க.. ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்த.. சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் கெடு!

Apr 05, 2024,04:11 PM IST

திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி சர்ச்சையாக பேசியதாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் சேர்த்து மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு 25 மக்களவைத் தொகுதிகளும்,175 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.


இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, அரக்கன், விலங்கு, திருடன், மக்களை காட்டி கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் என பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.




இது ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் லெல்லா அப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார். அந்த ஆடியோவில் தேர்தல் விதிகளை மீறியதாக பேச்சு இருந்தது தெரியவந்தது.


இதற்கு தேர்தல் ஆணையம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 48 மணி நேரத்தில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுவரை சந்திரபாபு நாயுடு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்படவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்