திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி சர்ச்சையாக பேசியதாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் சேர்த்து மே 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு 25 மக்களவைத் தொகுதிகளும்,175 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, அரக்கன், விலங்கு, திருடன், மக்களை காட்டி கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் என பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.
இது ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் லெல்லா அப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார். அந்த ஆடியோவில் தேர்தல் விதிகளை மீறியதாக பேச்சு இருந்தது தெரியவந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 48 மணி நேரத்தில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுவரை சந்திரபாபு நாயுடு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்படவில்லை.
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
{{comments.comment}}