டெல்லி: பாலஸ்தீனத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து காஸாமுனைப் பகுதியை குணடு வீச்சாலும் அதிரடித் தாக்குதலாலும் சூறையாடி வருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல், அப்பாவி பாலஸ்தீனியர்களும் உயிரிழந்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் வசித்து வரும் இந்தியர்களுக்கு உதவ களம் இறங்கியுள்ளது மத்திய அரசு. அவசர கால ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துளளது.
அதன்படி பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள், தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், இந்தியப் பிரதிநிதி அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையின் ரமல்லா நகரில் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதிநிதி அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவ்வால் - 0592-916418 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 970-592916418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}