டெல்லி: பாலஸ்தீனத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து காஸாமுனைப் பகுதியை குணடு வீச்சாலும் அதிரடித் தாக்குதலாலும் சூறையாடி வருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல், அப்பாவி பாலஸ்தீனியர்களும் உயிரிழந்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் வசித்து வரும் இந்தியர்களுக்கு உதவ களம் இறங்கியுள்ளது மத்திய அரசு. அவசர கால ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துளளது.
அதன்படி பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள், தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், இந்தியப் பிரதிநிதி அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையின் ரமல்லா நகரில் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதிநிதி அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவ்வால் - 0592-916418 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 970-592916418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}