நெல்லை மக்களே.. அவசர உதவி தேவைப்படுவோர்.. இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்!

Dec 17, 2023,06:54 PM IST

நெல்லை : கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நெல்லை மாவட்டத்திற்கு அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்ட அணைகளும் வேகமாக நிரம்பி, அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்ற காலை வரை மட்டும் பல அணைகளில் 16 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.




இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு நெல்லையில் கனமழை பெய்யும். நாளை காலைக்குள் 300 மி.மீ., வரை மழை பதிவாகலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மக்களுக்கு உதவும் வகையில் அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


அவரச உதவி எண்கள் :


மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1077

மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1070

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி - 101, 102

மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு - 9498794987

மழைக்கால நோய்கள் தொடர்பாக - 104

அவசர மருத்துவ உதவிக்கு - 108

சமீபத்திய செய்திகள்

news

வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?

news

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்

news

Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?

news

அழகு மயில்!

news

என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)

news

மதியொளி முகமோ!

news

குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்