நெல்லை : கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நெல்லை மாவட்டத்திற்கு அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்ட அணைகளும் வேகமாக நிரம்பி, அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்ற காலை வரை மட்டும் பல அணைகளில் 16 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு நெல்லையில் கனமழை பெய்யும். நாளை காலைக்குள் 300 மி.மீ., வரை மழை பதிவாகலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மக்களுக்கு உதவும் வகையில் அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவரச உதவி எண்கள் :
மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1077
மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1070
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி - 101, 102
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு - 9498794987
மழைக்கால நோய்கள் தொடர்பாக - 104
அவசர மருத்துவ உதவிக்கு - 108
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}