பல மணி நேர சோதனைக்குப் பின்னர்.. கே.சி.ஆரின் மகள் கவிதா கைது.. பரபரப்பில் ஹைதராபாத்!

Mar 15, 2024,07:29 PM IST

ஹைதராபாத்: டெல்லி மது விலக்குக் கொள்கை முறைகேட்டு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா, இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடந்த பல மணி நேர சோதனைக்குப் பின்னர் கவிதாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


ஹைதராபாத் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட கவிதாவை, டெல்லிக்கு கொண்டு சென்று விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. கவிதா தற்போது தெலங்கானா சட்ட மேலவையில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த ஆண்டு இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டிருந்தார் கவிதா. அதன் பின்னர் விசாரணைக்கு வருமாறு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை.




மீண்டும் அவரை விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்தது அமலாக்கத்துறை. அதை எதிர்த்து கவிதா, உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், புதன்கிழமை வரை அவர் விசாரிக்க தடை விதித்திருந்தது.  இந்த வழக்கின் விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிரடியாக களம் இறங்கி கவிதாவைக் கைது செய்து விட்டது அமலாக்கத்துறை.


முன்னதாக இன்று காலை முதல் கவிதாவின் வீட்டில் பல மணி நேரம் சோதனையிட்டது அமலாக்கத்துறை. அதன் பின்னர் கடும் வாக்குவாதத்திற்குப் பின்னர் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர். தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு 100 நாட்களை நிறைவு செய்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இன்று மாலை ரோடுஷோ நடத்திய நாளில் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்