சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்து பிளஸ் ஒன் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் தொடங்கவுள்ளன. பிளஸ் டூ தேர்வை மொத்தம் 7. 25 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தடை இன்றி தேர்வுகளை படித்து எழுத தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால் மாணவர்கள் படிக்க சிரமமப்படுவார்கள் என்பதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிவிப்பில், 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது. அனைத்து மின்வாரிய தலைமை பொறியாளர்களும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}