சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்து பிளஸ் ஒன் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் தொடங்கவுள்ளன. பிளஸ் டூ தேர்வை மொத்தம் 7. 25 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தடை இன்றி தேர்வுகளை படித்து எழுத தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால் மாணவர்கள் படிக்க சிரமமப்படுவார்கள் என்பதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிவிப்பில், 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது. அனைத்து மின்வாரிய தலைமை பொறியாளர்களும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}