சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்து பிளஸ் ஒன் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் தொடங்கவுள்ளன. பிளஸ் டூ தேர்வை மொத்தம் 7. 25 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தடை இன்றி தேர்வுகளை படித்து எழுத தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால் மாணவர்கள் படிக்க சிரமமப்படுவார்கள் என்பதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிவிப்பில், 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது. அனைத்து மின்வாரிய தலைமை பொறியாளர்களும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}