10, 11, 12 ஆம் வகுப்பு.. தேர்வுகள் முடியும் வரை.. மின் தடை கூடாது.. அமைச்சர் தங்கம் தென்னரசு

Mar 01, 2024,07:29 PM IST

சென்னை:  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார்.


பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்து பிளஸ் ஒன் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் தொடங்கவுள்ளன. பிளஸ் டூ தேர்வை மொத்தம் 7. 25 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தடை இன்றி தேர்வுகளை படித்து எழுத தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால் மாணவர்கள் படிக்க சிரமமப்படுவார்கள் என்பதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 




இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிவிப்பில், 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது. அனைத்து மின்வாரிய தலைமை பொறியாளர்களும்  துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்