ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு விட்டார்.. அவரைப் பற்றியெல்லாம் பேச முடியாது.. எடப்பாடி பழனிச்சாமி!

Jul 08, 2024,05:53 PM IST

சேலம்:  ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டார். அவரைப் பற்றிப் பேச முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவை சேர்ந்தவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 




இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் கிடையாது. அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியும். காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாது. 


காவல்துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படவில்லை. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. போதைப் பொருள் விற்பனை தாராளமாக இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த கொலையில் எவரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரணடைந்துள்ளனர். இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. 


ஓபிஎஸ் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. அவர் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு விட்டார்.  ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை. கட்சி வாகனத்தை நொறுக்கவில்லை. கட்சி பொருளை திருடவில்லை. ஆனால், இப்போது நடந்திருப்பது வேறு.


முன்னாள் அமைச்சர் எ.ஆர். விஜயபாஸ்கர் மீது போடப்பட்டது சிவில் வழக்கு, இதை கிரிமினல் வழக்கு போல மிகைப்படுத்துகின்றனர். அதிமுகவினரை பழி வாங்கும் நோக்கில் இது போன்ற வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்