சேலம்: ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டார். அவரைப் பற்றிப் பேச முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவை சேர்ந்தவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் கிடையாது. அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியும். காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாது.
காவல்துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படவில்லை. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. போதைப் பொருள் விற்பனை தாராளமாக இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த கொலையில் எவரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரணடைந்துள்ளனர். இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
ஓபிஎஸ் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. அவர் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு விட்டார். ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை. கட்சி வாகனத்தை நொறுக்கவில்லை. கட்சி பொருளை திருடவில்லை. ஆனால், இப்போது நடந்திருப்பது வேறு.
முன்னாள் அமைச்சர் எ.ஆர். விஜயபாஸ்கர் மீது போடப்பட்டது சிவில் வழக்கு, இதை கிரிமினல் வழக்கு போல மிகைப்படுத்துகின்றனர். அதிமுகவினரை பழி வாங்கும் நோக்கில் இது போன்ற வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}