ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாளையுடன் அனல் பறக்கும் பிரசாரம் முடிவடையவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம்தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து அவரவர் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கப் பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில், இளங்கோவனுக்காக மிகத் தீவிரமான பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
முக்கியத் தலைவர்கள் பிரசாரம் செய்து வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 25ம் தேதி பிரசாரம் செய்யவுள்ளார். ஏற்கனவே இளங்கோவனுக்காக உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்துள்ளனர். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.
அதிமுக தரப்பில் முன்னாள் முதல்வரும், இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக வேட்பாளருக்காக பேசி விட்டுப் போயுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கியப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். தேமுதிக சார்பிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனல் பறக்க நடந்து வரும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் 26ம் தேதி ஓய்வு நாளாகும். 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
பிரசாரம் ஓயும் 25ம் தேதி மாலை 5 மணியுடன் வெளியூர்க்காரர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். அதன் பிறகு தொகுதியில் அவர்கள் தங்கியிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}