ஈரோடு கிழக்கு: ஓ.பி.எஸ்ஸைத் தொடர்ந்து.. ஏ.சி.சண்முகமும் பாஜக போட்டியிட ஆதரவு

Jan 22, 2023,10:22 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவு தருவதாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கூட்டணியில் அவர்களது இடைத்தேர்தல் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அதை விட முக்கியமாக திமுக கூட்டணியினர் தேர்தல் பிரசாரத்திலும் இறங்கி விட்டனர். அமைச்சர்கள் முத்துச்சாமி, கே. என். நேருதலைமையில் வீடு வீடாகப் போய் பிரசாரத்தையும் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

மறுபக்கம் அதிமுக கூட்டணியில் இன்னும் தெளிவு பிறக்காமல் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறார். ஆனால் அப்படி அவர் நிறுத்தினால் ஓ.பி.எஸ் தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. அதேசமயம், இத்தொகுதியில் தான் போட்டியிட பாஜக விரும்புகிறது. குழப்பம் இப்படி இருக்கையில்,இத்தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோற்ற தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதால் அதை விட்டுக் கொடுத்து விட்டதாக அறிவித்து விட்டது.

இந்த சூழ்நிலையில் தற்போது பந்து பாஜக வசம் வந்துள்ளது. பாஜகவின் விருப்பத்தை மீறி அதிமுகவின் இரு அணிகளும் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி மீறுவாரா என்றும் தெரியவில்லை. ஒரு வேளை அவர் மீறிச் செயல்பட முடிவு செய்தால் ஓ.பி.எஸ் மூலம் இரட்டை இலை சின்னத்துக்கு பாஜக தரப்பு செக் வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இப்படிக் குழப்பங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில், பாஜக போட்டியிட்டால்அதை ஆதரிப்போம் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். அதேபோல தற்போது புதிய  நீதிக் கட்சியும் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக தேசியக் கட்சியான பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்தினால், அதனை புதிய நீதிக் கட்சி வரவேற்கும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்