ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
ஈரோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்த தொகுதியில் வருகிற 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
திமுக தரப்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத்சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது இன்று தொடங்கிய பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்ரவரி 1ம் தேதி முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில், 209 முதியவர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்குகள் செலுத்த விண்ணப்ப படிவம் வழங்கி இருந்த நிலையில் அவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இதை அடுத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். வாக்குப்பெட்டிகள் வைப்பதற்கான அறை பாதுகாப்பு அறைகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Anitha Radhakrishnan: முதல்வருக்கு எதிராக அவதூறு பேச்சு.. திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது
உச்சநீதிமன்றத்தை நாடும் திமுக: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக அதிரடி முடிவு
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விலகல்
குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் முன்ஜாமீன் கோரி மனு
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நாளை ஆஜராக உத்தரவு
எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது : மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்
சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
"கோயில்களில் முறைகேடா? இனி நேரடியாக புகார் அளிக்கலாம்" – அமைச்சர் அறிவிப்பு!
{{comments.comment}}