ஈரோடு இடைத்தேர்தல்.. வீடு வீடாக சென்று.. பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்!

Jan 27, 2025,04:55 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. 


ஈரோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்த தொகுதியில் வருகிற 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. 


திமுக தரப்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத்சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது இன்று தொடங்கிய பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்ரவரி 1ம் தேதி முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.




ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில், 209 முதியவர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்குகள் செலுத்த விண்ணப்ப படிவம் வழங்கி இருந்த நிலையில் அவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இதை அடுத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். வாக்குப்பெட்டிகள் வைப்பதற்கான அறை பாதுகாப்பு அறைகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

news

என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா

news

சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்

news

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

news

மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)

news

பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

news

மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?

அதிகம் பார்க்கும் செய்திகள்