ஈரோடு இடைத்தேர்தல்.. வீடு வீடாக சென்று.. பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்!

Jan 27, 2025,04:55 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. 


ஈரோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்த தொகுதியில் வருகிற 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. 


திமுக தரப்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத்சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது இன்று தொடங்கிய பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்ரவரி 1ம் தேதி முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.




ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில், 209 முதியவர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்குகள் செலுத்த விண்ணப்ப படிவம் வழங்கி இருந்த நிலையில் அவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இதை அடுத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். வாக்குப்பெட்டிகள் வைப்பதற்கான அறை பாதுகாப்பு அறைகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்