ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல். ஏ.வாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத்தொடர்ந்து அங்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என முக்கியக் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. மற்ற அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்து விட்டன. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி மட்டுமே முக்கியக் கட்சிகளாக களம் காண்கின்றனர். மொத்தம் 65 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது. இன்று 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 பேர் இந்த இடைத்தேர்தலை களம் காண உள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். கட்சித் தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் மறுத்துவிட்டார். இதனால் 2வது முறையாக மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்கவுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின்போதுதான் முதல் முறையாக நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}