ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல். ஏ.வாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத்தொடர்ந்து அங்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என முக்கியக் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. மற்ற அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்து விட்டன. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி மட்டுமே முக்கியக் கட்சிகளாக களம் காண்கின்றனர். மொத்தம் 65 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது. இன்று 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 பேர் இந்த இடைத்தேர்தலை களம் காண உள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். கட்சித் தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் மறுத்துவிட்டார். இதனால் 2வது முறையாக மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்கவுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின்போதுதான் முதல் முறையாக நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}