ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!

Feb 04, 2025,07:10 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 5ம் தேதி நாளை அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வேட்பாளரும் அன்றே அறிவிக்கப்பட உள்ளார்.இந்த இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட 13 பேர் அரசியல் கட்சி வேட்பாளர்களும், 33 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 




இந்நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர்.நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம்  2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்களிக்க உள்ளனர். 


மொத்தம் 237 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி

news

கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்

news

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!

news

தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!

news

சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்

news

கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்