மீளாமலேயே காலமான கணேசமூர்த்தி.. சோகத்தில் ஈரோடு.. தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி

Mar 28, 2024,07:17 PM IST

ஈரோடு: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.


நாடாளுமன்ற உறுப்பினரான கணேசமூர்த்தி மதிமுக வின் பொருளாளராக பதவி வகித்து வந்தார். 1983 ஆம் ஆண்டு வைகோ திமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்களில் ஒருவர். அன்று முறை வைகோவுடனேயே இருந்து வந்தார். கடந்த2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 




இவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியால், கடந்த மார்ச் 24ஆம் தேதி சல்பாஸ் என்னும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக எம்பி கணேசன் மூர்த்தியை  ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர் . இதனைத் தொடர்ந்து அவருக்கு சமீப காலமாக மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 


மருத்துவக் கண்காணிப்பில் இருந்த எம் பி கணேசன் மூர்த்திக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அவசரப்பட்டு விட்டார் கணேசமூர்த்தி என்று வைகோ வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கணேசமூர்த்தி காலமானார்.


கணேசமூர்த்தியின் மறைவு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்  தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்