மீளாமலேயே காலமான கணேசமூர்த்தி.. சோகத்தில் ஈரோடு.. தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி

Mar 28, 2024,07:17 PM IST

ஈரோடு: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.


நாடாளுமன்ற உறுப்பினரான கணேசமூர்த்தி மதிமுக வின் பொருளாளராக பதவி வகித்து வந்தார். 1983 ஆம் ஆண்டு வைகோ திமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்களில் ஒருவர். அன்று முறை வைகோவுடனேயே இருந்து வந்தார். கடந்த2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 




இவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியால், கடந்த மார்ச் 24ஆம் தேதி சல்பாஸ் என்னும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக எம்பி கணேசன் மூர்த்தியை  ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர் . இதனைத் தொடர்ந்து அவருக்கு சமீப காலமாக மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 


மருத்துவக் கண்காணிப்பில் இருந்த எம் பி கணேசன் மூர்த்திக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அவசரப்பட்டு விட்டார் கணேசமூர்த்தி என்று வைகோ வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கணேசமூர்த்தி காலமானார்.


கணேசமூர்த்தியின் மறைவு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்  தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்