மு.க.ஸ்டாலின் இனி "ஆல் இந்தியா தலைவர்".. ஈவிகேஎஸ் இளங்கோவன்!

Mar 04, 2023,10:30 AM IST
சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இனியும் பிராந்திய தலைவர் கிடையாது. அவர் ஆல் இந்தியா தலைவர் என்று ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்காக காங்கிரஸ்காரர்களை விட திமுகவினர்தான் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன.




பண பலம் மிகப் பெரிய அளவில் களமாடியது. திமுக கூட்டணித் தரப்பிலும், அதிமுக தரப்பிலும் சரி சமமாக பணத்தை இறக்கி விளையாடியதாக பல்வேறு செய்திகள், புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் வெளியாகின. இருப்பினும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் தான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருப்பதாக பொருத்தமாக கூறியுள்ளார். அவர் இனியும் பிராந்தியத் தலைவர் இல்லை. அவர் ஆல் இந்தியா தலைவர்.   அவர் சொன்னது போல அவர் ஏற்கனவே அகில இந்திய அரசியலில் இருக்கிறார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், மக்கள், மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறார், எப்படிச் செயல்படுகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து அதை பின்பற்றவும் செய்கிறார்கள். அந்த வகையில் அவர் அகில இந்திய தலைவர்தான் என்றார் இளங்கோவன்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்