மு.க.ஸ்டாலின் இனி "ஆல் இந்தியா தலைவர்".. ஈவிகேஎஸ் இளங்கோவன்!

Mar 04, 2023,10:30 AM IST
சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இனியும் பிராந்திய தலைவர் கிடையாது. அவர் ஆல் இந்தியா தலைவர் என்று ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்காக காங்கிரஸ்காரர்களை விட திமுகவினர்தான் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன.




பண பலம் மிகப் பெரிய அளவில் களமாடியது. திமுக கூட்டணித் தரப்பிலும், அதிமுக தரப்பிலும் சரி சமமாக பணத்தை இறக்கி விளையாடியதாக பல்வேறு செய்திகள், புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் வெளியாகின. இருப்பினும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் தான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருப்பதாக பொருத்தமாக கூறியுள்ளார். அவர் இனியும் பிராந்தியத் தலைவர் இல்லை. அவர் ஆல் இந்தியா தலைவர்.   அவர் சொன்னது போல அவர் ஏற்கனவே அகில இந்திய அரசியலில் இருக்கிறார்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், மக்கள், மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறார், எப்படிச் செயல்படுகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து அதை பின்பற்றவும் செய்கிறார்கள். அந்த வகையில் அவர் அகில இந்திய தலைவர்தான் என்றார் இளங்கோவன்.

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்