மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவர்.. கார்கில் ஹீரோவின் மனைவி!

Jul 21, 2023,03:36 PM IST
டெல்லி: மணிப்பூரில்  மெய்தி இன வெறியர்களிடம் சிக்கி நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர், முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்று தெரிய வந்துள்ளது.

இந்த ராணுவ வீரர் கார்கில் போரில் பங்கேற்றவர் ஆவார். கார்கில் ஹீரோவின் மனைவிக்கே இந்த கதியா என்று நாடே அதிர்ந்து போய் நிற்கிறது.

மணிப்பூர் அவலத்தை யாராலுமே இன்னும்  ஜீரணிக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.  மனதைப் போட்டு உலுக்கிக் கொண்டிருக்கின்றன அந்த குரூர காட்சிகள். இந்த சம்பவம் தொடர்பாக  தொடர்ந்து அடுக்கடுக்காக பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.



அந்த வன்முறை வெறியாட்டத்தின்போது இரண்டு இளம் பெண்களை நிர்வாணப்படுத்தியும், பாலியல் ரீதியாக குரூரமாக நடந்து கொண்டும் தெருத் தெருவாக அழைத்துச் சென்றது அந்தக் கும்பல். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர்  முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அஸ்ஸாம் ரெஜிமென்ட் பிரிவில் சுபேதாராக பணியாற்றியவர். கார்கில் போரில் பங்கேற்ற வீரரும் கூட.

இவர் தனது மனைவிக்கு நேர்ந்த கதி குறித்து உள்ளூர் சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், கார்கில் போரில் கலந்து கொண்டு எனது நாட்டை நான் காப்பாற்றினேன். இலங்கையிலும் கூட  நான் இந்திய அமைதி காக்கும் படையில் ஈடுபட்டு பணியாற்றியுள்ளேன்.  எனது தேசத்தை காப்பாற்ற முடிந்தது. ஆனால் என்னால் எனது மனைவியின் மானத்தைக் காப்பாற்ற முடியவில்லை.  எனது சொந்த கிராமத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

மே 4ம் தேதி காலை, ஒரு பெரிய கும்பல் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை தீவைத்து கொளுத்தியது. பெண்கலை எல்லாம் அவர்கள் மானபங்கப்படுத்தினர்.  எனது மனைவி உள்ளிட்ட இரண்டு பெண்களையும் பிடித்து ஆடைகளை எல்லாம் அவிழ்த்து நிர்வாணமாக நிறுத்தி வைத்தனர்.  அங்கு அப்போது போலீஸார் இருந்தனர். ஆனால் யாருமே தடுக்கவில்லை. 

வீடுகளை எரித்தவர்களை, பெண்களை மானபங்கப்படுத்தியவர்களை ஒருவரை கூட விடக் கூடாது. அத்தனை பேருக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குமுறியுள்ளார் அந்த முன்னாள் ராணுவ வீரர்.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்