சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை வந்துள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின்படி திமுக ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது. அதேசமயம், தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தியாக உருவெடுப்பதும் உறுதியாகியுள்ளது.
தேர்தல் களத்தில் முதல் முறையாக இறங்கிய தவெக 3வது பெரிய கட்சியாக வருவதோடு, இரட்டை இலக்கத்தில் வெற்றியையும் பெறும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதாவது திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஓரளவுக்கு வெற்றி பெற்றவராக பார்க்கப்படுபவர் விஜயகாந்த்தான். ஆனால் நடப்பு தேர்தலில் விஜயகாந்த்தையும் மிஞ்சும் அளவுக்கு எடுத்த எடுப்பிலேயே இரட்டை இலக்கத்தில் விஜய் வெல்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேமுதிக தான் சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகளுடன் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. ஆனால் விஜய்யின் தவெகவுக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைப்பதாக கூறப்படுவது முக்கியமானது.
இது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, இதுவரை அதிமுக அல்லது மாற்று சக்திகளை நோக்கி நகர்ந்த இளைஞர்களின் வாக்குகள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் விஜய்யின் பக்கம் சரிந்துள்ளதாகவும் தெரிகிறது.
தவெகவினர் தாங்கள் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கூறி வருகின்றனர். ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள் வேறு மாதிரியான முடிவுகளையே காட்டுகின்றன. ஆனால் இதிலேயே விஜய் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கும் என்று கூறப்படுவதே அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றிதான். அதிலும் 15 இடங்களுக்கு மேல் கிடைத்தால் அது விஜய்க்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படும்.
காரணம் - இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை விஜய் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்யவில்லை. குறிப்பிட்ட இடங்களில்தான் பிரச்சாரம் செய்தார். பல சவால்களையும் சந்தித்தார். இதையெல்லாம் தாண்டி எக்ஸிட் போல்களில் கூறப்படுவது போல அவருக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கிடைத்தால் அதுவெ அக்கட்சிக்கு பெரிய வெற்றியாக கூறலாம்.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}