ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. 20ம் தேதி வரை அப்ளை பண்ணலாம்!

Oct 09, 2024,03:27 PM IST

டெல்லி:   ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிய உள்ள நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ரயில்வே துறையில், பட்டதாரி பதவிகளுக்கான ஆர்ஆர்பி என்டிபிசி 2024 தேர்வுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 13ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் அவகாசம் தரப்பட்ட  நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




இதே போல், தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 21,22ம் தேதிக்குள் தங்க் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படிவ திருத்தத்திற்கு அக்டோபர் 23 முதல் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.


இளங்கலைப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், பட்டதாரி பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்