புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடிகை சங்கீதா பிஜ்லானிக்கு சொந்தமான பண்ணை வீடு சேதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார் சங்கீதா. இதைப் பயன்படுத்தி விஷமிகள் உள்ளே புகுந்து சூறையாடியுள்ளனர். இதுகுறித்து புனே ரூரல் போலீசில் நடிகை சங்கீதா பிஜ்லானி புகார் அளித்துள்ளார்.
வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு, கட்டில், குளிர்சாதன பெட்டி மற்றும் CCTV கேமராக்கள் உட்பட பல வீட்டு உபயோகப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. ஒரு தொலைக்காட்சி பெட்டியும் காணாமல் போயுள்ளது. தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பண்ணை வீட்டிற்கு வர முடியவில்லை என்று சங்கீதா பிஜ்லானி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று நான் எனது இரண்டு வேலைக்காரர்களுடன் பண்ணை வீட்டிற்கு சென்றேன். அங்கு கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பிகள் சேதமடைந்திருந்தன. ஒரு தொலைக்காட்சி பெட்டி காணாமல் போயிருந்தது. மற்றொன்று உடைந்து இருந்தது. மேல் மாடி முழுவதும் சூறையாடப்பட்டு இருந்தது. அனைத்து கட்டில்களும் உடைக்கப்பட்டு இருந்தன. பல வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருந்தன என்றார் அவர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அஸாரூதீனின் முன்னாள் மனைவி சங்கீதா என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}