புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடிகை சங்கீதா பிஜ்லானிக்கு சொந்தமான பண்ணை வீடு சேதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார் சங்கீதா. இதைப் பயன்படுத்தி விஷமிகள் உள்ளே புகுந்து சூறையாடியுள்ளனர். இதுகுறித்து புனே ரூரல் போலீசில் நடிகை சங்கீதா பிஜ்லானி புகார் அளித்துள்ளார்.
வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு, கட்டில், குளிர்சாதன பெட்டி மற்றும் CCTV கேமராக்கள் உட்பட பல வீட்டு உபயோகப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. ஒரு தொலைக்காட்சி பெட்டியும் காணாமல் போயுள்ளது. தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பண்ணை வீட்டிற்கு வர முடியவில்லை என்று சங்கீதா பிஜ்லானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று நான் எனது இரண்டு வேலைக்காரர்களுடன் பண்ணை வீட்டிற்கு சென்றேன். அங்கு கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பிகள் சேதமடைந்திருந்தன. ஒரு தொலைக்காட்சி பெட்டி காணாமல் போயிருந்தது. மற்றொன்று உடைந்து இருந்தது. மேல் மாடி முழுவதும் சூறையாடப்பட்டு இருந்தது. அனைத்து கட்டில்களும் உடைக்கப்பட்டு இருந்தன. பல வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருந்தன என்றார் அவர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அஸாரூதீனின் முன்னாள் மனைவி சங்கீதா என்பது குறிப்பிடத்தக்கது.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
சித்திரையும் வெயிலும்!
{{comments.comment}}